பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கிற வேலை கனகசாமிக்கு. எது நடக்கிறதோ இல்லையோ... அந்தந்த
வேளைக்கு டான் என்று மணி அடித்துவிடுவார் கனகு. அன்றும் வழக்கம்போல வீட்டில்
இருந்து கிளம்பிய கனகுக்கு, பெரிய கவலை ஒன்று வாட்டி எடுத்தது. 'ச்சே! இன்னிக்கு
மணி அடிக்க முடியாதே... இப்படி ஆயிடுச்சே..!’ என்று புலம்பித் தள்ளினார். 'நேத்து
எல்லாம் நல்லா அடிக்க முடிஞ்சதே. காலைல இப்படி ஆயிடுச்சே... ஹூம்! இன்னிக்கு
ஃபுல்லா மணி அடிக்காமலே ஓட்டியாகணும்...’ என்று பள்ளிக்கூடத்தை நெருங்கிய கனகு,
'சரி, ஸ்கூல் டயம் ஆயிடுச்சு... ஃபர்ஸ்ட் பெல்லை அடிச்சுட்டு வந்து, நம்ம சைக்கிள்
பெல்லுல என்ன ரிப்பேர்னு கவனிப்போம்’ என்று ஓடினார்.
கனகு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment