RSS

கற்றுக் கொடுத்த காக்கைகள்!

எங்கள் வீட்டு வாசலில் ஒரு பெரிய நெட்டிலிங்கம் மரம்
உள்ளது. சில நாட்களுக்கு முன்பு அதில் இரண்டு
காக்கைகள், முட்களால் சிறிய கூடு கட்டின.

இதனால் வாசல் முழுவதும் முட்கள் சிதறியிருந்தது.
நாங்கள் போகும் போதும் வரும்போதும் எங்கள்
கால்களில் குத்தி ஒரே எரிச்சலாக இருந்தது.


அதனால், என்கணவர், இரவு மொட்டை
மாடிக்குப் போய் அந்தக்கூட்டையெல்லாம் பிரித்து,
சுற்றி வைத்திருந்த முட்கள், பொடி கம்பி அனைத்தையும்
பிய்த்து எறிந்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து மூன்றாம் நாள் பக்கத்தில் இருந்த
ஒரு பெரிய லக்ஷ்மிகடாட்ச கீரை மரத்தில்
(லெட்சகட்டகீரை) ஒரே காக்கா கூட்டம்.
நான்கு நாட்களாக கத்திக் கொண்டேயிருந்தன. நான்
விரட்டிப் பார்த்தேன். ஒரு கம்பில் கறுப்புத் துணியைக்
கட்டி மரத்தின் நடுவே வைத்துப் பார்த்தேன்.
எதற்கும் மசிவதாயில்லை.

மறுநாள் என் கணவர், மொட்டைமாடியில் போய்ப்
பார்த்தார். அந்த மரத்தில் முள்ளே இல்லாமல்
வெறும் காய்ந்த குச்சி, சாக்குப்பை, பஞ்சு
ஆகியவற்றை வைத்து காக்கா கூட்டமே சேர்ந்து அழகாகக்
கூடு கட்டியிருந்தது. இரண்டு காக்கைகளையும்
அந்தக் கூட்டில் குடி வைத்துவிட்டு அனைத்தும்
பறந்து சென்றுவிட்டன.

எங்களுக்கோ ஆச்சரியம் கலந்த சிரிப்பாகிவிட்டது. அந்தக்
கூட்டைப் பிரிக்காமல் விட்டுவிட்டோம்.
இப்பொழுது இரண்டு காக்கைகளும்
சௌகரியமாக உட்கார்ந்து முட்டையிட்டு அடைகாக்கின்றன.

இதிலிருந்து தனித்து நின்று எதையுமே செய்ய முடியாது.
துணைக்கு நல்ல உறவுகளும், நண்பர்களும்
தேவை என்ற பாடத்தை நாங்கள் கற்றுக்
கொண்டோம்.

நன்றி: மங்கையர் மலர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆட்டுக்குட்டியின் தந்திரம்!

மந்தையிலிருந்து  பிரிந்து போன ஒரு ஆட்டுக் குட்டியை
ஓநாய் துரத்தியது.

தப்பிக்க முடியாது என்று தீர்மானமாகத்
தெரிந்ததும், ஆட்டுக்குட்டி, ஓநாயைப் பார்த்து, “”நான்
இனித் தப்ப முடியாது என்பது எனக்குத் தெரியும்.
நான் இன்னும் சிறிது நேரம்தான் வாழப் போகிறேன்.
இறப்பதற்கு முன் என்னை மகிழ்ச்சியாகச் சிறிது நேரம் இருக்க
அனுமதிப்பாயா? சிறிது நேரம் பாட்டுப் பாடேன் நான்
ஆடுகிறேன்,” என்று கேட்டது.


ஓநாயும் அதற்குச் சம்மதித்து, தனது குழலை எடுத்து சத்தமாக
வாசித்தது; ஆட்டுக் குட்டியும் நடனமாட ஆரம்பித்தது.
ஆனால், சில நிமிடங்களுக்குள்ளேயே குழல் இசை கேட்டு,
ஆட்டு மந்தையை மேய்ப்பவர்கள் ஓடி வந்து ஓநாயை விரட்டி
அடித்தனர். ஓடிக் கொண்டே ஓநாயும், “எனக்கு இது தேவைதான்.
வேட்டையாடுவதுதானே என்னுடைய தொழில். அதை விடுத்து
குழல் ஊதியது தவறுதான்!’ என்று சொல்லி வருந்தியது.

—-
நீதி! அவரவர் செய்ய வேண்டிய தொழிலை விட்டுவிட்டு
அடுத்தவர் தொழிலை செய்வது ஆபத்து.நன்றி;சிறுவர் மலர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முன்யோசனை

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்
நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது.

“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் …………………..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்