தேனீக்கள் மலருக்கு மலர் சென்று தேன் சேகரிப்பதை சில ஈக்கள் பார்த்தன. எதற்கு இத்தனை கஷ்டம். ஒரு வீட்டில் அலமாரியில் தேன் பாட்டில் வைத்து இருந்தார்கள். அது சரியும் நிலையில் இருந்ததை . ஈக்கள் பார்த்து விட்டன . காத்திருந்து, அது சரிந்ததும் மாற்றி மாற்றிக் குடிக்கலாம் என்று நினைத்தது.
அவைகள் எதிர்பார்த்தபடியே தேன் பாட்டில் சரிந்து தரையெல்லாம் தேன். ஈக்கள் உற்சாகத்துடன் மொய்த்துத் தேனைத் தத்தம் சின்ன நாக்குகளால் பருகின, திருப்தியாகத் தேன் குடித்ததும் பறந்து போக முயற்சித்த போது இறக்கையெல்லாம் தேன் ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் தேனிலேயே மாட்டி இறந்துவிட்டன.
நீதி : இலவச சந்தோஷம் உயிரை வாங்கிவிடும்.
இலவச சந்தோஷம் உயிரை வாங்கிவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment