RSS

ஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்

தாயை போல கருணையும்
தந்தை போல அறிவுரையும் 


தவறுகளை திருத்தியதும்
ஏணியாய் இருந்து என்னை ஏற்றியதும்
அறிவு பசியை ஆற்றியதும்
நல்லது கெட்டது அறியும் அறிவு தந்ததும்
புத்தனின் ஞானமும் சித்தனின் அனுபவமும்
சொல்லி கொடுத்த தெய்வமும்
சிறு சிறு தவறுகளை திருத்தியும்
உலக அறிவையும் உணர்த்தியும்
என்னையும் பலரையும் மேலே உயர்த்தியும்
எங்கள் திறமைகளை புரியவைத்தும்
தோழன் போல தோளில் தட்டிக்கொடுத்தும்
முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றும்
பல சேவை செய்த உங்கள் சேவைக்கு
நன்றி சொல்கிறேன் என் பாசமிக்க ஆசிரியர்களே
உங்கள் ஆசிரியர் பயணம் என்றும்
இனிமையாய் நீண்டு தொடரவும்
நீங்கள் பல்லாண்டுகள் வாழவும்
என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - நெய்வேலி வடக்கு (திரு. சி. சக்கரை,
திரு. எபனேசர் (ஓட்டபிடாரம்), திருமதி/ செல்வி புவனேஸ்வரி (பட்டுக்கோட்டை), நல்ல சத்துணவு வழங்கிய ஆசிரியர் திரு. ப. மணிராசு.


பின்லே மேல்நிலை பள்ளி - மன்னார்குடி (ஆசிரியர்கள் & ஆசிரியைகள்).

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - ஆலங்குடி - (ஆசிரியர்கள் & ஆசிரியைகள்)


ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பட்டுக்கோட்டை (பேராசிரியர்கள் & பேராசிரியைகள்)


எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி - கரூர் - (பேராசிரியர்கள் &

பேராசிரியைகள்)


மற்றும் எனக்கு படிப்புக்கு உதவிய நண்பர்கள் & சில நல்ல விஷயங்களை கற்று கொடுத்த நல்ல நண்பர்கள் (இவர்களும் ஒரு வகையில் ஆசிரியர்களே)

என்றும் உங்களை மறவா
பாபு நடேசன்
நெய்வேலி வடபாதி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சேவலும் நரியும் | தந்திர சேவல் | தமிழ் அறிவு கதைகள்

காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு சேவல் ஆனதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது; நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று கத்தினால் காடே அதிரும்.




அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.


சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.
இந்தச் சேவலைத் தந்திரத்தால்தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.
 

""அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்னை வரக் கூடாது. பிரச்னை வந்தால் கடும் தண்டனை தரப்படும்.


""எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் ஊலல்லல்லா பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக் கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக் கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் ஞாபகத்துக்கு வந்தாய். வா, நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்,'' என்றது.


நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.



அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது.
""நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே,'' என்றது.

 

"நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது.

""அதை விட முக்கியமான சமாசாரமா? அது என்ன.....?'' என்றது நரி.

""வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது சேவல்.

""அவை எப்படி இருக்கின்றன?'' என்று பயத்துடன் கேட்டது நரி.
""இரண்டும் நாக்கை தொங்க விட்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும், இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ... இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,'' என்றது சேவல்.


""நாசமாப் போக, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள். பார்த்தால் கடித்துக் குதறி விடும்,'' என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி.
நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு | பள்ளி செல்லும் குழந்தைகள்


குழந்தைகள் ஒரு வரப்பிரசாதம் மற்றும் விலை மதிக்க முடியாத சொத்து.
உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிப்பது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்! மணி கணக்கில் உங்கள் பாதுகாப்பின்றி அவள் தனியாக தானாகவே இந்த வெளி உலகத்தில் இருப்பாள். 

பள்ளியில் தான் சந்திக்கும் அனைவரும் தன்னை போலவே பயத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பார்கள் என்று கூறுங்கள். ஆனால் அவர்கள் அங்கு புதிய நண்பர்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கையளியுங்கள்.
 
பள்ளியை பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும், பாசிடிவ்வாக இருக்கட்டும். நீ விரும்பிற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் இருக்கு; சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்கே இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே... என்கிற ரீதியில் பேச வேண்டும். 

பள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை, சரியான நேரத்துக்கு எழுப்பி, குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதை, தினசரி வேலையாக கொள்ளுங்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் என்றால். குழந்தைக்கும், கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்; இது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

பள்ளியை பற்றி குழந்தையிடம் நேர்மறையான முறையில் எடுத்து கூறுங்கள் - சிந்தித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை பற்றி அவர்களை பழக்கப்படுத்துங்கள், பள்ளியை பற்றி கேள்வி அல்லது சந்தேகங்களை உங்களிடம் கேட்க ஊக்குவியுங்கள்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உங்களின் குழந்தைகளை நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பது உங்களின் கைகளில் தான் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் பள்ளிகளில் மற்ற மாணவர்களுடன் போட்டிகள் போடும் போது, அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து நீங்களே அவர்களின் மனதில் பொறாமை போன்ற தவறான எண்ணங்கள் தோன்றும்படியான செயல்களை சொல்லிக்கொடுக்காதீர்கள்.
மேலும், பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் மற்ற பழக்க வழக்கங்களை பற்றி அடிக்கடி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிந்து கொள்வதன் மூலம் உங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும். அதுமட்டுமின்றி உங்கள் குழந்தைகளின் வகுப்பு ஆசிரியருடைய தொலைபேசி எண்ணை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளி செல்லும் போது அவர்களின் பையில் உங்கள் வீட்டின் விலாசம், தொலைபேசி எண் உள்ள அட்டையை மறக்காமல் வைக்க வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உங்களின் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் உங்களிடம் இருக்கவே இருக்காது.

தொகுப்பு : பாபு நடேசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்