கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன், மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். அதுதான் சந்தர்ப்பம் (opportunity) என்னும் சிலை.அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.
சந்தர்ப்ப சிலையிடம் சில கேள்விகள்
உனக்கு இறக்கை எதற்கு?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!
முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப்பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!
ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்ப்பத்தைப் பயனபடுத்தாதோரிடமிருந்து கணநேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!
பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?.
சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதிருப்பதற்காக!
சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள். இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார். ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால் அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
0 comments:
Post a Comment